Tuesday, February 17, 2015

ஒரு அரங்கத்தில் Engineer&Doctor ல யார் கெட்டிக்காரங்கன்னு ஒரு விவாதம் வந்தது .அதை எப்படியாவது நிரூபிக்க வேண்டும் என்றும் சொன்னார்கள்.ஒரு Engineer & ஒரு Doctor ம் ஒத்துக்கொண்டார்கள் .
என்ஜினீயர் ஓர் கிளினிக் திறந்தார்..வாசலில் ஒரு போர்டு மாட்டினார்..அதில்எல்லா நோய்களும் குணபடுதப்படும்.பீஸ் 3௦௦ ருபாய்...அப்படி குணமாக வில்லையென்றால் 1000 ரூபாயாக திருப்பி தரப்படும் என்று.
அந்த டாக்டருக்கு இதை பார்த்து விட்டு இவனை எப்படியாவது ஏமாற்றிவிடணும்னு அந்த கிளினிக் சென்று..சொன்னார்..
"எனக்கு எந்த ருசியும் தெரியவில்லை ..குணப்படுத்துங்கள் ..
உடனே அந்த என்ஜினீயர் நர்ஸிடம் நம்பர் 22 வது பாட்டில் மருந்து மூன்று சொட்டு இவர் நாக்கில் விடசொன்னார்...நர்ஸும் அவ்வாறு செய்ய..உடனே அந்த டாக்டர் இது பெட்ரோல் என அலறினார்..
அந்த என்ஜினீயர் உங்களுக்கு இப்போது சுவை தெரிய ஆரம்பித்து விட்டது .என சொல்லி 300 ருபாய் வாங்கி விட்டார்.
டாக்டர் மிகவும் கோபமடைந்து சிறிது நாள் கழித்து மீண்டும் அங்கு சென்று..என்னுடைய ஞாபக சக்தி குறைந்து விட்டது என மருந்து கேட்டார்..உடனே எஞ்சினீயர் நர்சிடம் அந்த நம்பர் 22 ல் உள்ள மருந்தை 3 சொட்டு வாயில் விட சொன்னார்..
உடனே டாக்டர் அது வாய் சுவைக்கான மருந்து என்றவுடன்..உங்கள் ஞாபக சக்தி திரும்ப வந்து விட்டது என எஞ்சினீயார் 300 ருபாய் வாங்கிவிட்டார்.
மீண்டும் டாக்டருக்கு,கோவம்&அவமானம்.
மீண்டும் சிறிது நாட்கள் கழித்து டாக்டர் அந்த கிளினிக் சென்று என் கண் பார்வை குறைந்து விட்டது சரிசெய்ய கேட்டார்..உடனே அந்த என்ஜினீயர் இந்தாருங்கள் 1000 ருபாய் என்றார்..
அந்த டாக்டர் உடனே இது 500 ருபாய் நோட்..1000 ருபாய் என்கிறீர்களே என்றார் ..பின் .அவரே 300 ரூபாயைகொடுது விட்டு வெளியே சென்றார்.. !!

No comments: